×

பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

நாமக்கல், ஜன.18: நாமக்கல் மாவட்ட எஸ்பி., ராஜேஷ்கண்ணா உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைவீதி, நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் குற்றத்தடுப்பு காவலர்கள் மற்றும் வெடி பொருள் கண்டுபிடித்தல் பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் நகரில் ஆஞ்சநேயர் கோயில், ரயில் நிலையம், பூங்காக்கள், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பரமத்திவேலூர், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிலையங்கள், சந்தைகள், கோயில்கள், பூங்காக்களில் ேபாலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ராசிபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் கருவிகளை கொண்டு ஆய்வு செய்தனர். மேலும், இங்குள்ள டூவீலர் ஸ்டாண்ட் பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

The post பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,SP ,Rajesh Khanna ,Republic Day ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...